Wednesday, 10 June 2020

என்னுயிரே எந்தன் நாடி நரம்பும் யாரசூலல்லாஹ்



அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

என்னுயிரே எந்தன் நாடி நரம்பும் யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ்(2)
                          (என்னுயிரே)
சந்திரனும் திகைத்து நின்றது உங்கள் அழகில் (2)
உம் முகம் தான் அழகே(2) ஆதி யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
                       (என்னுயிரே)

உம் முகம் பார்ப்பதற்கு எந்தன் உள்ளம் துடிக்கிறதே(2)
உம் முகம் பார்க்கவே(2) என் ஆசை யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
                       (என்னுயிரே)

மதினத்து மாநகருக்கு எங்களையும் அழைத்திடுவீர்(2)
உம்மோடு இருக்கவே(2) என் கனவு யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
                       (என்னுயிரே)

இருளிலே வாழ்ந்தவருக்கு ஒளியினை கொடுத்தீரே(2)
உண்மை ஸஹாபிகளை(2) தந்த யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
                       (என்னுயிரே)

உங்கள் ஆசீக்கீன்களின் பெயருடைய பட்டியலில்(2)
இப்பாவி பெயரையும் (2) சேர்பீரே யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
                       (என்னுயிரே)

அண்ணல் உங்கள் அன்பை நாடி


அண்ணல் உங்கள் அன்பை நாடி
எந்தன் உள்ளம் ஏங்குதே
அமீனே ஹபீபே உமை மனம் தேடுதே..( slow)

அண்ணல் உங்கள் அன்பை நாடி
எந்தன் உள்ளம் ஏங்குதே
அமீனே ஹபீபே உமை மனம் தேடுதே..(அண்ணல்)
தென்றல் வீசும் மதினா நான் காணுவேனா(தென்றல்)
பணிவோடு ரவ்ளா முன்னால் நான் நிற்பேனா
எண்ணி எண்ணி ஏங்கினேன்
இறையிடம் வேண்டினேன் (எண்ணி)
நபியெ உம்மை காணும் நாளை எதிர்பார்கிறேன். (அண்ணல்)

மிம்பர்படி கூட, உம் நினைவில் அழுதே
எந்தன் உள்ளம் கல்லாய் இன்னும் கண்ணீர் வரவில்லையே (எந்தன்)(slow)
மக்கம் கண்ட நபியே யாநபி யாநபி யாநபி யாநபி
நபியின் முகமதிலே அகிலமும் அடங்கிடும்
அதை ஒருநொடி காண எந்தன் உயிர் துடித்திடும்
உயிரெனும் கூட்டினிலே உயிர் உமை தேடிடுமே
உமை காண வரம் வேண்டுமே
கனாவில் காண வேண்டுமே
என் ஆசை தீர வேண்டுமே (கனாவில்)

மிம்பர்படி கூட உம் நினைவில் அழுதே
எந்தன் உள்ளம் கல்லாய் இன்னும் கண்ணீர் வரவில்லையே
மக்கம் கண்ட நபியே உம்மை மனம் காண ஏங்குதே (மக்கம்)
உயிர்போகும் முன்னே உம்மை நான் காண வேண்டுமே (அண்ணல்)

உந்தன் விரல் அசைவில் நிலவை பிளந்தீர்(உந்தன்)
இருவிரல் இடையே நீர் பொங்க செய்தீர்
மனகமழும் கஸ்தூரிவாசம் மேனி எங்கும் வீசுதே( மனம்)
நீ சென்ற பாதையெல்லாம் மேகம் குடை ஆனதே (அண்ணல் (2))
சர்தாரே ஆலம்
இருலோக சர்தார்
கண்ணான அஹமது
பொன்னான முஹம்மது
கருத்திலே ஹாமீது
கல்பீலே மஹ்முத்
மக்கத்து கோமான்
மதீனத்து சீமான்
யாரசூலுல்லாஹ்
யாஹபீபல்லாஹ்
யாஷஃபியல்லாஹ்
அந்த ரசூலுல்லாஹ் (2)
நபி.... யாநபி... யாநபி..யா...நபி






கருணை மிகுந்த கண்மணியே..


கருணை மிகுந்த கண்மணியே...
ஆ.... ஆ......
எந்தன் உயிரே ஏந்தலரே
கண்கள் தேடும் காதலரே
உங்கள் பேச்சில் உள்ளம் உருகும்
நேரங்கள் அனைத்தும் நிமிடங்கள் ஆகும்
எம்நினைவே எந்தன் நபியே
உம் புகழ் பாடவா.. ஆ
இப் பாடல்வரியின் நாயகரே உமை போற்றவா..
யாநபியே.. யாஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே..(2)
                 (எந்தன் உயிரே..)

கண்ணீரும் கதறும் உம் வருகை தேடி..
என் பாதங்கள் போகும் உன் மதினம் நாடி.. (கண்ணீரும்)
தாகம் தீரா கண்ணீர் கடலில் மூழ்கிடும் வேளையிலே
என் தாகம் தீர்த்து கண்ணீர் துடைப்பீர் காலத்தின் கண்மணியே..
யாநபியே.. யாஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே..(2)
                 (எந்தன் உயிரே..)

மேகங்கள் நிழல் தந்த நேர்மை நபியே
நிழலே இல்லா நேரத்தில் நிம்மதி நீரே..(2)
நிழலே நெருங்க நிஜத்தின் உருவே கனவில் வருவீரே..
நான் பணிவுடன் உமக்கு பணிவிடை செய்ய பரிந்துரை செய்வீரே..
யாநபியே.. யாஹபீபேயே பாடும் எங்கள் தேடலும் நீரே..(2)
                 (எந்தன் உயிரே..)

நிலவொளியும் தரம் இழக்கும் உங்கள் ஒளியில்
சிறு பிள்ளையும் தாய் மறக்கும் உங்கள் அன்பில்(2)
சூரிய அனலும் நெருங்கிடும் அந்த மறுமையின் வேளையிலே..
மெய் ஏகனின் தூதே அர்ஷின் நிழலை இடம்பெற்று தருவீரே..
யாநபியே.. யாஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே..(2)
                 (எந்தன் உயிரே..)

Monday, 8 June 2020

அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்


அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ்

அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லா

உனக்கே சொந்தம் ஆகுமே அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே உனக்கே சொந்தம் ஆகுமே அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே…

யா…ரஹுமானே யா…ரஹீமே யா…ரஹுமானே யா…ரஹீமே அருளைப் பொழிய வேண்டும் உலகில் அமைதி நிலவ வேண்டும் அருளைப் பொழிய வேண்டும் உலகில் அமைதி நிலவ வேண்டும் அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் 
அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே…

வையகம் எங்கும் அமைதி இல்லை தீய வன்முறையால் மக்கள் படும் தொல்லை (இசை) 
வையகம் எங்கும் அமைதி இல்லை தீய வன்முறையால் மக்கள் படும் தொல்லை நியாம் தருமம் வர வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் வல்லவனே மிக நல்லவனே வாழ்வின் நன்னெறி காப்பாய் இறையோனே வல்லவனே மிக நல்லவனே வாழ்வின் நன்னெறி காப்பாய் இறையோனே அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
எல்லா புகழும் அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே…

நெருப்பினை பூங்கா வனமாக்கி நபி இபுறாஹீம் உயிர் காத்தவனே (இசை) 

நெருப்பினை பூங்கா வனமாக்கி நபி இபுறாஹீம் உயிர் காத்தவனே சிறப்புடன் நைல் நதி பிளந்திடவே நபி மூசா நலம் பெறச் செய்தவனே ரஹ்மத்தாய் நபியை தந்தவனே புவி அமைதிக்கு அருள்வாய் மறையோனே ரஹ்மத்தாய் நபியை தந்தவனே புவி அமைதிக்கு அருள்வாய் மறையோனே 
அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்  எல்லா புகழும் அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே…

தூதர் நபியை பகைவர்கள் பின் தொடர்ந்ததும் தௌர் என்னும் குகையினிலே (இசை) 

தூதர் நபியை பகைவர்கள் பின் தொடர்ந்ததும் தௌர் என்னும் குகையினிலே ஊதினால்ப் பறக்கும் சிலந்தி வலைக் காவல் உதவினாய் உனக்கே ஈடும் இல்லை காத்தமுன் நபியைக் காத்தவனே அவர் கௌமையும் காப்பாய் கனிவுடனே காத்தமுன் நபியைக் காத்தவனே அவர் கௌமையும் காப்பாய் கனிவுடனே 
அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்  எல்லா புகழும் அல்லா அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே உனக்கே சொந்தம் ஆகுமே அல்லாஹ் உனக்கே சொந்தம் ஆகுமே…

வான்மறைச் சோலையில்



வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில் 
எண்ணிலா துயர் சுமந்த கண்மனிகள் 
நம் இஸ்லாத்தில் மனம் பரப்பும் தீன் மலர்கள்

வாய்மையிலே வரலாறு கண்டவர்
கொடை வள்ளலாகி செல்வமெல்லாம் வாரி தந்தவர் 
ஓய்வில்லாமல் தீனுக்காக உழைத்தவர்
எங்கள் உத்தமராம் அபூபக்கர் சித்தீக் ஆனவர்
உலகம் போற்றிடும் ரோஜா மலரைப் போன்றவர் (2)

வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில் 

வாளெடுத்தால் பகை முடிக்கும் வல்லவர் தனி
வாழ்க்கையிலே சாந்தம் கொண்ட மிகவும் நல்லவர்
தோல் கொடுத்த கிலாபத்தை காத்தவர் 
நபியின் தோழராகி உமர் கத்தாப் எனச் சிறந்தவர்
நிலவில் பூத்திடும் அல்லி மலரை போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில் 

சாந்தமுடன் அமைதியாக திகழ்ந்தவர் நபி 
சர்தாரின் பெயரைச் சொன்னால் அள்ளி தருபவர்
ஏந்துகின்ற இறைமறையை தொகுத்தவர்
தீனின் இனியவராம் உதுமான் உயர் தியாகம் செய்தவர்
கொடியில் கமழ்ந்திடும் முல்லை மலரை போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில் 

போர் களத்தில் வேங்கையாகி வெல்பவர் 
ஞானம் பொழிகின்ற அறிவியை போல் அறிவில் சிறந்தவர்
ஆற்றெழுந்தால் இரட்டை வாள் வீச்சாளர்
வீரர் அலியாரவர் அர்ஷின் புலியாக திகழ்ந்தவர் 
பார் புகழும் பாரிஜாத மலரை போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில் 

ஹிந்தாவின் சூழ்ச்சிக்கிறையானவர் அவர்
ஹிம்மத்துடன் தீனுக்காக ஷஹீதானவர் 
ஹம்ஜாவெனும் வீர சிங்கம் தானவர் எங்கள் 
அண்ணல் முஸ்தஃபாவின் சிறிய தந்தையானவர்
அன்றெழுந்த செந்தாமரை மலரை போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில் 

அடிமை தலையில் கட்டுண்ட ஹபஷி அவர் 
இறையை அஹதுன் அஹதுன் என்றே துணிந்து சொன்னவர் 
கொடுமைகளை தீனுக்காக ஏற்றவர் 
பாங்கின் குரல் கொடுக்க நபி அழைத்த பிலால் தானவர்
நீரில் பூத்திடும் நீல மலரைப் போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில் 

Sunday, 7 June 2020

சொன்னால் முடிந்திடுமோ



சொன்னால் முடிந்திடுமோ..

சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை

வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு…
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு
விண்ணகத்துத் தாரகையும் வெட்க்கப்படும் பார்த்து விட்டு
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பேரழகை

அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்…
அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்
பண்பு வந்து நபியிடத்தில் பணிவைக் கேட்டுச் செல்லும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் சொல்லழகை

திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்…
திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்
அருள் மறை வேதத்திலே அவர் புகழ் நிறைந்திருக்கும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைதனை

சொன்னால்…முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை

சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ…

ஞானத்தின் திறவுகோல் நாயகம்




ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்..

பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)
சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)
அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

வானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந்தித்தார்(2)
வான் மழை கடல் அலையை கண்டிரையை புகழ்ந்திட்டார்(2)
இறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

கலிமா தொழுகை நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜுடனே(2)
பலுது ஏதுமில்லாத பண்பான வாழ்க்கை முறை(2)
பகுப்புகள் நடந்தனறே வாஞ்சை நபி தொடர்ந்தனறே
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

பொருளியல் அரசியலில் புதுமை விஞ்கானமதில்(2)
அருளியல் இல்லறத்தில் ஆன்மிக வழிமுறையில்(2)
எத்துரையும் கற்றிருந்தார் ஏகன் அருள் பெற்றூயர்ந்தார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

பண்பான நபிபெருமான் பல்கலைகழகமன்றோ(2)
அன்பான மாணவராம் அவர்வழி உம்மத்தன்றோ(2)
தேர்வினிலே வென்றிடுவோம் தீன்வழியில் நின்றிடுவோம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
ரசூல் நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்.


வாரும் நபியே..



வாரும் நபியே.. 
தாஜுதீன் ஃபைஜி அவர்கள் பாடியது
உன்ன நெனச்சேன் என்ற தமிழ் பாடலின் மெட்டு



வாரும் நபியே நீர் வாரும் நபியே – எம்
வள்ளல் இரசூல் நபியே நூருன் நபியே
ஆளும் நபியே எமை ஆளும் நபியே – அகம்
ஆனந்தமே அள்ளித் தரவாரும் நபியே
வழிமீது விழிவைத்து வரும் வேளை நோக்குகிறோம்
வாரும் நபியே முகம்பாரும் நபியே – எங்கள்
வாஞ்சை மன ஏக்கமதை தீரும் நபியே

அவ்வலும் நீரே ஆகிரும் நீரே
ஆதியில் நூராய் வந்த ஜோதி நபியே
அகமதும் நீரே முகமதும் நீரே
அல்லாஹ்வின் தூதாய் வந்த நீதி நபியே – எங்கள்
இன்பதுன்பம் அனைத்திலும் எங்கள் துணையே – உங்கள்
அன்பு நெஞ்சம் பாவி தஞ்சம் புகும் மனையே – நீர்
இல்லாமல் வாழ்வில்லை உண்மையே - இதை
சொல்லாமல் வாழ்ந்தென்ன நன்மையே
உடலோடு உடலாக உயிரோடு உயிராக
வாழும் நபியே எம்மில் வாழும் நபியே – உம்
வாஞ்சை முகம் காண வேண்டும் வாரும் நபியே
வாரும் நபியே நீர்வாரும் நபியே – வந்த
வாசல் ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கோடான கோடி கல்புகள் நாடி
கோவென்று போற்றிக் கொண்டாடும் நபியே
பாமாலை சூடி பொழுதெல்லாம் கூடி
பாசத்தை கொட்ட மனம் நாடும் நபியே – உயர்
மஞ்சத்திலே வீற்றிருக்கும் மன்னர் நபியே – எம்
நெஞ்சத்திலும் வீற்றிருக்க வாரும் நபியே – உமை
காணாமல் ஒளி இல்லை கண்ணிலே – மொழி
கேளாமல் சுகமில்லை நெஞ்சிலே
பேரின்ப காதல் மனம் பாவி எங்கள் நெஞ்சுக்குள்ளே
வீச நபியே நீர் வாரும் நபியே – வரும்
பாதைமலர் தூவுகின்றோம் வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கஸ்தூரி வாசம் வீசும் மெய் தேகம்
கருமேகம் குடை இடும் காமில் நபியே
மெய்யவன் நேசம் வாரியே வீசும்
மிஃராஜு ராஜர் எங்கள் மேன்மை நபியே – வழி
தோரணங்கள் கட்டிவைப்போம் வாரும் நபியே – சுப
சோபனங்கள் பாடிநிற்போம் வாரும் நபியே – உமை
கொண்டாடும் உள்ளங்கள் தவிக்குது – தினம்
மன்றாடி கண்ணீரில் மிதக்குது
மதீனாவின் திசைநோக்கி ஸலவாத்தை இசையாக்கி
பாடிநிற்கின்றோம் முகம் தேடி நிற்கின்றோம் - எங்கள்
மன்னர் உங்கள் வரவையே நாடி நிற்கின்றோம்
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

லட்சிய கீதம் லட்சத்தில் ஓதும்
முத்திரையிடப்பட்ட சொர்க்க நபியே
உச்சத்தின் உச்சம் உம்மத்தின் நேசம்
உள்ளத்தில் கொண்ட உயர்வர்க்க நபியே
உடல் நாளம் போடும் தாளம் உங்கள் காதல் இசையே
எங்கள் காலம் ஓடும் காதல் நபி காலடியிலே
இந்த இகவாழ்வில் எமை காக்கும் நாயகம்
நீர் மறுவாழ்வில் கரைசேர்க்கும் தாயகம்
கலிமாவின் பொருள் சொல்ல வலிமார்கள் வழிவந்து
வாழும் நபியே எமை காரும் நபியே
உங்கள் காதல் மொழி காதில் விழ வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

மக்கத்தில் நீரும் துயர் கண்ட நேரம்
பக்கத்தில் இல்லை நாங்கள் பண்பு நபியே
மதீனத்து வீதி மகிழ்ந்தாடும் நேரம்
மகிழ்ந்தாட இல்லை நாங்கள் மாண்பு நபியே – தாங்கள்
தாயிஃபிலே பட்ட துயர் கொஞ்ச நஞ்சமா – உயர்
தாயின் மனம் கொண்ட உம்மில் அருள் பஞ்சமா – நீர்
தரவேண்டும் திருக்காட்சி கண்ணிலே – உடன்
வரவேண்டும் அடிமைகள் முன்னிலே
குருநாதர் உருவாக திருஞானம் தருவோரே
வாரும் நபியே துயர் தீரும் நபியே – கவி
பாடும் எமின் ஏக்கம் தீர வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே


தென்றல்காற்றே கொஞ்சம் நில்லு..



தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு..

பாடல்வரிகள்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ..!  
கொஞ்சம் நில்லு ...!! 

அண்ணல் திரு நபி.. இடம் போய் சொல்லு ..! எங்கள் 
ஸலாம் சொல்லு ,,,!!

சன்மார்க்கம்  தந்த நபி ..துன் மார்க்கம் வென்ற நபி ...
சாத்மீக மெய்ஞான பெருமான் ..!

கண்ணோடு கண்ணாகி கல்புக்குல்   நிறைவாகி 
கருணைக்கு பொருள் தந்த எம்மான் ..!!

அண்ணலை காணத்துடிக்கின்றேன்  இந்நாள் ..!
காணத்துடிக்கின்றோம் இந்நாள் ...!!

மடமையாம் இருள் போக்கி ..மதுவையும்  விஷமாக்கி 
மாந்தரின் நலம் காத்த பெருமான் ...!

மண்ணோடு பெண் மகவை  மகிழ்வோடு புதைத்திட்ட 
மா பாதக செயல் தடுத்த எம்மான்...! 

அந்த மஹ்மூதரை  காண்பது ..என் நாள் ..!!

கடல் ,காடு ,மலை ,பாலை ,கடக்கின்ற இறைவேதம் 
கனி வாயில் மொழிந்தருளிட்ட எம்மான் ...!!

கடல் போன்ற பகைமுன்னே உடைவாளை கரம் ஏந்தி 
படை கொண்டு பகை வென்ற பெருமான் ..!!
பத்ரு''படையரசர் முகம் காண்ப தென் நாள் ..!!

எந்நாளும்.... இறை இல்ல பாங்கோசையில்  அண்ணலின் நாமம் இயம்பாத கணம் ஏது ....!

திரு நாமம் செவியுற்று ,கை நகம்  கண்தொட்டு கனிகின்ற ஸலவாத்தின் கஸ்தூரி மனம் கமழும் எம்மான் ..!

அண்ணலின்  கருணைக்கு அழுகின்றேன்  இந்நாள் ..!!

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ..!   
கொஞ்சம் நில்லு ...! 

அண்ணல் திரு நபி இடம் போய்  சொல்லு...!!
எங்கள் அன்பு ஸலாம்  சொல்லு ....!!

*எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நம் உயிரினும் மேலான  கண்மணி

காத்தமுன் நபி முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ 
ஸல்லம் அன்னவர்களின்,,,

ஷஃபாஅத்திற்கு உரியவர்களாகும்  பாக்கியத்தை நஷீபாக்கி நல்குவானாகவும்...!!

ஆமீன்,,யா ரப்பில் ஆலமீன்.!

ஸல்லல்லாஹு  அலா முஹம்மதின் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

(பாடல்; ஹாஜி நாகூர்  E.M ஹனீபா அன்னவர்கள்)

நீராடும் கண்களோடு..

EM.Nagore Hanifa Tamil Islamic Devotional Songs.


பாடல்வரிகள்::

நீராடும் கண்களோடு
நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலல்லாஹ்..!
நான் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்..! 
மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்..!

1.வான்மறையை நெஞ்சில் ஏந்தி
வாய்மையினை வாழ்வில் ஏந்தி
தீன்குலத்து நாயகமே யா ரசூலல்லாஹ்..
உங்கள் திருமுகத்தை காண வேண்டும் யா ரசூலல்லாஹ்..
திருமுகத்தை காண வேண்டும் யா ரசூலல்லாஹ்..

2.வாழும்நெறி வகுத்தளித்து
வாழ்ந்துகாட்டி விளங்கவைத்து
வானம் சென்று இறையை கண்ட யா ரசூலல்லாஹ்..
உங்கள் வாகைதனை பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்..
வாகைதனை பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்...

3. தேன்சுரக்கும் சுவர்க்கலோகம்
தூயவர்கள் வாழும் இல்லம்
தேடிடுவேன் நான் தங்களை யா ரசூலல்லாஹ்..
உங்கள் தேனியிதழால் அழைக்க வேண்டும் யா ரசூலல்லாஹ்..
தேனியிதழால் அழைக்க வேண்டும் யா ரசூலல்லாஹ்...

4.அகிலம் தோன்ற ஜீவனாகி
ஆண்டவனின் தூதராகி
புகழ் உலகில் ஆட்சி செய்யும் யா ரசூலல்லாஹ்..
உங்கள் புன்னகையில் நான் லயிப்பேன் யா ரசூலல்லாஹ்..
புன்னகையில் நான் லயிப்பேன் யா ரசூலல்லாஹ்..

5. பாதை மாறிச் சென்றிடாமல் 
பாதுகாத்து இங்கே எம்மை
நீதி கூறும் மறுமைநாளில் யா ரசூலல்லாஹ்..
நான் நல்லோருடன் வாழ வேண்டும் யா ரசூலல்லாஹ்..
நல்லோருடன் வாழ வேண்டும் யா ரசூலல்லாஹ்..

நீராடும் கண்களோடு
நெஞ்சம் நிறை பாசத்தோடு (2)
மாறாத ஈமானோடு யாரசூலல்லாஹ்..!
நான் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்..! 
மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்..!

என்னுயிரே எந்தன் நாடி நரம்பும் யாரசூலல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் என்னுயிரே எந்தன் நாடி நரம்பும் யாரசூலல்லாஹ் உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம்...