கருணை மிகுந்த கண்மணியே...
ஆ.... ஆ......
எந்தன் உயிரே ஏந்தலரே
கண்கள் தேடும் காதலரே
உங்கள் பேச்சில் உள்ளம் உருகும்
நேரங்கள் அனைத்தும் நிமிடங்கள் ஆகும்
எம்நினைவே எந்தன் நபியே
உம் புகழ் பாடவா.. ஆ
இப் பாடல்வரியின் நாயகரே உமை போற்றவா..
யாநபியே.. யாஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே..(2)
(எந்தன் உயிரே..)
கண்ணீரும் கதறும் உம் வருகை தேடி..
என் பாதங்கள் போகும் உன் மதினம் நாடி.. (கண்ணீரும்)
தாகம் தீரா கண்ணீர் கடலில் மூழ்கிடும் வேளையிலே
என் தாகம் தீர்த்து கண்ணீர் துடைப்பீர் காலத்தின் கண்மணியே..
யாநபியே.. யாஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே..(2)
(எந்தன் உயிரே..)
மேகங்கள் நிழல் தந்த நேர்மை நபியே
நிழலே இல்லா நேரத்தில் நிம்மதி நீரே..(2)
நிழலே நெருங்க நிஜத்தின் உருவே கனவில் வருவீரே..
நான் பணிவுடன் உமக்கு பணிவிடை செய்ய பரிந்துரை செய்வீரே..
யாநபியே.. யாஹபீபேயே பாடும் எங்கள் தேடலும் நீரே..(2)
(எந்தன் உயிரே..)
நிலவொளியும் தரம் இழக்கும் உங்கள் ஒளியில்
சிறு பிள்ளையும் தாய் மறக்கும் உங்கள் அன்பில்(2)
சூரிய அனலும் நெருங்கிடும் அந்த மறுமையின் வேளையிலே..
மெய் ஏகனின் தூதே அர்ஷின் நிழலை இடம்பெற்று தருவீரே..
யாநபியே.. யாஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே..(2)
(எந்தன் உயிரே..)
No comments:
Post a Comment